குத்பா  பிர­சங்­கத்தை சுருக்கி,  தொழு­கை நேரத்தை அதிகரித்துக்கொள்ளுமாறு  அகில இலங்கை ஜம்­ – இய்­யத்துல் உலமா சபை,  நாட்­டி­லுள்ள அனைத்து  ஜும்ஆப்  பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும்,  நிர்­வா­கிகளையும் கேட்டுள்ளது.

   அகில இலங்கை ஜம்­ – இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக்,  நாட்டின் சகல ஜும்ஆப்  பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜும்ஆப்  பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

   பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் நண்பகல் 1.30 மணி­யையும் கடந்து ஜும்ஆப்  பிர­சங்­கங்கள் நடை­பெ­று­வ­தாக,  உலமா சபையின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இதனால் ஜும்ஆத்  தொழு­கைக்­காக,  குறு­கிய நேர விடு­மு­றைகளைப் பெற்­று­வரும் அர­சாங்க மற்றும் தனி­யார்­துறை ஊழி­யர்கள், பல்வேறு  சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர்.கதீப்­மார்கள் குத்­பாவைச் சுருக்கி,  தொழு­கையை நீட்டிக் கொள்­வதே,  சன்மார்க்கத்துக்கான சிறந்த அடை­யா­ள­மாகும்.
குத்பாப்  பிர­சங்­கங்கள் நீண்ட நேரம் இடம்­பெ­று­வதால்,  வய­தா­ன­வர்கள் உள்ளிட்ட  நோயாளர்­கள் பலரும், பல்­வேறு சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர்.
இதனைத் தவிர்ப்பதற்காக குத்பாப்  பிரசங்கங்களை இயன்றளவு  சுருக்கிக் கொள்ளுமாறும்,  உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க்  எம்.எம்.ஏ. முபாறக், அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )