குத்பாவை சுருக்கி, தொழுகை நேரத்தை அதிகரிக்கவும் – உலமாசபை கோரிக்கை
அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக், நாட்டின் சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா
பெரும்பாலான பள்ளிவாசல்களில் நண்பகல் 1.30 மணியையும் கடந்து ஜும்ஆப் பிரசங்கங்கள் நடைபெறுவதாக, உலமா சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஜும்ஆத் தொழுகைக்காக, குறுகிய நேர விடுமுறைகளைப் பெற்றுவரும் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்கள், பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்
குத்பாப் பிரசங்கங்கள் நீண்ட நேரம் இடம்பெறுவதால், வயதானவர்கள் உள்ளிட்ட நோயாளர்கள் பலரும், பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்
இதனைத் தவிர்ப்பதற்காக குத்பாப் பிரசங்கங்களை இயன்றளவு சுருக்கிக் கொள்ளுமாறும், உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக், அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )