ஐ.தே.கவின் ‘பட்ஜட்’ தோற்கடிப்பு – மைத்திரியும், மஹிந்தவும் கூட்டாக வைத்தனர் வேட்டு!

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆளுகையின்கீழுள்ள கண்டி, கங்கவட்டகோரளை பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


மேற்படி சபையின் முதலாலது பட்ஜட்டுக்கு ஆதரவாக 9 உறுப்பினர்களும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர். இதன்படி மேலதிக 2 வாக்குகளால் ‘பட்ஜட்’ நிராகரிக்கப்பட்டது.

சபையில் 21 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். 9 ஆசனங்களைக் கைப்பற்றிருந்த ஐ.தே.க., சுதந்திரக்கட்சியின் (02உறுப்பினர்கள்) ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இதனால், 9 ஆசனங்களைக் கைப்பற்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிரணியில் அமர்ந்தது. ஒரு ஆசனத்துடன் ஜே.வி.பி. நடுநிலை வகித்தது.

தற்போது பிரிந்திருந்த மஹிந்தவும், மைத்திரியும் இணைந்துள்ளதால், ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆப்பு வைக்கும் வகையில் பட்ஜட் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *