தந்தையை பொல்லால் அடித்து படுகொலை செய்த மகன்! காசல்ரீ பகுதியில் கொடூரம்!!

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தனது தந்தையையே பொல்லால் அடித்து படுகொலை செய்த மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மன நோயாளியான மகனுக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலையடுத்தே, தந்தை பொல்லால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார் என்று  பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்றும், மன நோயாளியான மகன் தினந்தோரும் சண்டையிடுவதாகவும் 27.11.2018 அன்று இரவிலிருந்து சண்டை உக்கிரமடைந்த நிலையிலேயே இவர் உயிரிழந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் நோட்டன்பிரிட்ஜ் பொலிசும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்து அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *