என்னைப் பயமுறுத்தப் பார்க்கின்றீர்களா? நான் ‘கருணா அம்மான்’ – ஐ.தே.கவுக்கு அவர் எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பலர் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், தன்னுடன் அலைபேசியில் உரையாட முயற்சிப்பதாகவும் பதிவிட்டுள்ள அவர், தான் மட்டக்களப்பிலுள்ள கருணா அம்மான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும், 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணா அம்மான் யார் என்பதை கேட்டுத் தெரிந்துக்கொள்ளுமாறும் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *