முகமாலையில் ரயிலில் மோதி ஒருவர் மரணம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட ரயிலில் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முகமாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்று சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *