மாவீரர் நிகழ்வுக்கு அரசால் அனுமதி வழங்கப்படவில்லை! – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

மாவீரர் நாள் நிகழ்வுக்கு அரசால் அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவெவ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையில்,

“மாவீரர் நினைவு தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசால் அனுமதி வழங்கப்படவில்லை.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *