ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது! – ஆஸி. கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.

பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி வரை சுமித், வார்னர் மீதான தடை இருக்கின்றது. பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் 29 ஆம் திகதியுடன் முடிகின்றது.

“இந்தத் தடை கடுமையானது. அதை நீக்க வேண்டும்” என்று கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.

ஆஸ்திரேலிய அணி சமீப காலமாக தோல்வியைத் தழுவி வருகின்றது. இதனால் ஸ்மித், வார்னர் மீதான தடை இந்திய தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோர் மீதான தடை நீக்கம் செய்யப்படமாட்டாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

தடை அதே நிலையில் இருக்கும் என்று கூறி கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *