7 தமிழரையும் உடன் விடுதலை செய்! சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை வட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.