சபையில் அமைதி: மைத்திரி மகிழ்ச்சி!

நாடாளுமன்றில் நேற்று அமைதியைப் பேணியமைக்காக அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான்காவது நாளாக நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பில் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, நேற்று நாடாளுமன்ற அமர்வில் அமைதியைப் பேணிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள் என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *