உதிஉயர் சபையில் அடிதடி – சொத்துகளுக்கு பெரும் சேதம்! எம்.பிக்களிடமிருந்து இழப்பீடு அறவீடு!!

நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையே அடிதடி ஏற்பட்டதால்  நாடாளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட எம்.பிக்களிடமிருந்து இழப்பீட்டுத் தொகை அறிவிடப்படும் என்று  பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

இந்த வியடம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், சொத்து சேத மதிப்பீடு இடம்பெற்று வருகின்றது என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் பாராளுமன்ற சொத்துக்களை சேதப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி கண்டறிவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *