4 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மூவர் மடக்கிப்பிடிப்பு!

ட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகையைச் சேர்ந்த 4,008  போதை மாத்திரைகளுடன் மூவர் மினுவாஙகொடை நகரில் வைத்து, மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சனிக்கிழமை (17) இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22, 48, 37 வயது உடையவர்கள் எனவும், அவர்கள் ராகம,  கொட்டுகொட  ஆகிய  பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த போதை மாத்திரைகளின்  பெறுமதி சுமார்  12 இலட்சம் ரூபாவுக்கும்  அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை,  மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மினுவாங்கொடை பொலிஸார் குறிப்பிட்டனர்.இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை,  மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *