நாடாளுமன்றுக்கு நாளை வருமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பு!

நாடாளுமன்றம் நாளை திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கூடும்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வருகை தந்து, ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கை ​தேசிய இயக்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிந்தக வீரகோன் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடளுமன்றத்தில் தோன்றியுள்ள சிக்கல் நிலையை ஜனாதிபதியால் மாத்திரமே தீர்க்க முடியும் என்றும் இலங்கை ​தேசிய இயக்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் உரிய முறையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, வாக்கெடுப்பை நடத்த உறுப்பினர்களுக்கு அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *