மைத்திரி – மஹிந்த இன்று காலை அவசர சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருடன் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடத்திய சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை மஹிந்தவிடம் மைத்திரி தெரிவித்துள்ளார் என அறியமுகின்றது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டன எனவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *