தெற்கு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு – அமைச்சுகளுக்கு அடுக்கு பாதுகாப்பு!

தெற்கில் நாளுக்குநாள் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையிலும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் தாம் முன்பு வகித்த அமைச்சுகளுக்கு செல்வதாலும் நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு நேற்றிரவு முதல் அமைச்சுகளின் அலுவலகங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமைய, விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடடைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

*மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
*நிதி மற்றும் பொருளாதார அமைச்சு
*சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு
*திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு
*பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு
*மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சு
*கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு
*நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு
*அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *