பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம் – வளாகத்தைசூழ அடுக்குப் பாதுகாப்பு
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக்கட்டத் தொகுதியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு சம்பந்தன் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.