விக்கியின் கூட்டணி தேர்தலில் குதிக்குமா? – விரைவில் முடிவு என்று அவரே தெரிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணி உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் என்று அதன் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
“மக்கள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வந்திருக்கின்றது. எமது கட்சி அதில் கவனம் செலுத்தும்.
அரசியல் நெருக்கடிகளால்தான் இந்தச் சூழல் எழுந்தது. விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.