ஐ.தே.க. தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதற்குத் தயார்! – சஜித் அதிரடி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி அளித்த அவரிடம், கட்சிக்குத் தலைமையேற்கத் தயாராக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால்,எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
கட்சியின் தற்போதைய தலைமை மற்றும் ஏனையவர்களின் ஆதரவு இருந்தால், எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளத் தயார்.
கட்சித் தலைவராக வருவதற்கு காட்டுச் சட்டங்களை, பின்பற்றுவதற்கு நான் தயாராக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.