பைத்தியக்காரன், கொடுங்கோலன் என மைத்திரியை விளாசித்தள்ளிய மங்கள!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்,

“மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து மைத்திரி ஜனாதிபதி பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத்தான் பெற்றிருக்கின்றோம். மைத்திரி ஒரு பைத்தியக்காரன்.

மக்களுக்கு எமது பெரும்பான்மையை காண்பிப்போம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

கொடுக்கோலனாக எழுச்சி பெற்றுள்ள மைத்திரிக்கு எதிராக நாம் போராடுவோம்.

நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் போராடுவோம். இந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராக தேர்தலில் போரிடவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஜனநாயகத்தின் பக்கம் நாங்கள் சரியாக நிற்கின்றோம். இந்தப் போரில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *