ஜனநாயகத்தை மீட்க வாருங்கள் மக்களே! – மங்கள அழைப்பு
ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக்கலைத்துள்ள நிலையில், அது குறித்து தனது ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி, சட்டவிரோதமாக நாடாளுமன்றத்தைக் கலைத்து இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஜனநாயகம், பண்பாடு மற்றும் சட்ட விதிகளை மதிக்கும் அனைவருமே இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்” என்று மங்கள அதில் கூறியுள்ளார்.