முல்லைத்தீவில் குளம் உடைப்பெடுப்பு! மாயமானவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு!!
அடைமழை காரணமாக குளம் உடைப்பெடுத்ததால் காணாமல்போயிருந்தவர்களில் 6 பேரை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, நித்தகை குளம் உடைப்பெடுத்ததில் குளத்துக்கு அருகில் இருந்தவர்கள் காணாமல்போயுள்ளனர் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குளத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த தாய், தந்தை, குழந்தை மற்றும் குளத்துக்கு அருகில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சிலருமே காணாமல்போயுள்ளனர் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குளம் உடைப்பெடுத்ததில் அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன எனவும், மேலும் மழை வீழ்ச்சி அதிகரித்தால் அந்ந ஊரே நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் நிலவும் சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.