ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையை ஆதரிக்கமாட்டோம்! – மனோ அறிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில், ஜனாதிபதிக்கு எதிராக அக்கட்சியின் எம்.பிக்கள் குற்றப்பிரேரணை முன்வைக்கவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுவிடயம் குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், மனோ கணேசனால் விடுக்கப்பட்டுள்ள டுவிட் பதிவிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைக்கு மேலும் வலுச் சேர்க்க விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.