மைத்திரிக்கு அமெரிக்கா மீண்டும் கடும் எச்சரிக்கை! – நாடாளுமன்றைத்தை உடன் கூட்டுமாறு வலியுறுத்து
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும். மேலும் தாமதித்தால் இலங்கை மீதான சர்வதேசத்தின் மதிப்பு குறைவடையும்.”
– இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஹீதர் நுவேட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ‘ருவிட்டர்’ தளத்தில் தெரிவித்துள்ளதாவது:-
“நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துகின்றோம்.
மேலும் தாமதித்தல் இலங்கை மீதான சர்வதேசத்தின் மதிப்பைக் குறைக்கிறது. அத்துடன் நல்லாட்சி, உறுதிப்பாடு மற்றும் செழிப்பு ஆகிய மக்களின் வேணவாக்களும் பாதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.