இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புதிய ரயில் எஞ்ஜின்கள்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரயில் எஞ்ஜின்கள் மற்றும் பெட்டிகள்,  இம்மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என்று, ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இதில் இரண்டு எஞ்சின்களும், 13 பெட்டிகளும் அடங்கியுள்ளன. இவை சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்குக்  கொண்டுவரப்படவுள்ளன. இதனுடன்,  மேலும் சில எஞ்சின்களும் கொண்டுவரப்படவுள்ளதாக,  ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

புதிய ரயில் பெட்டிகள் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டவையாகும். இவை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

மூன்று மாத காலம் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பின்னர், இதன் வெற்றியைக் கருத்திற் கொண்டு,  ஏனைய ரயில் பெட்டிகளும் இலங்கைக்கு  இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *