பண்டாரகமவில் பயங்கரம்! பாலத்திற்கு அருகிலிருந்து பெண்ணின் தலை மீட்பு!!
இனந்தெரியாத பெண் ஒருவரின் தலை பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்தத் தலை மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தொடர்பான அடையாளம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.