சகோதரர்கள் மோதல்: ஒருவர் கொலை! மற்றவர் தற்கொலை!!
மின்னேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த மற்றவர் தற்கொலை செய்துள்ளார்.
மின்னேரியா, மகரத்மலே பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலின்போது இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.