அலரிமாளிகையில் ரவி! – ரணிலுடன் முக்கிய பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நண்பகல் அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார்.

தனது ஆதரவாளர்களுடன் அலரி மாளிகைக்குச் சென்ற ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

இ​தேவேளை, ரவி கருணாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளார் என்று கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளுக்கு மத்தியில், ரவி இன்று ரணிலைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *