மஹிந்த பக்கம் தாவினார் வடிவேல் சுரேஷ்!
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து செயற்படப் போகின்றார்.
இந்தத் தகவலை பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை சந்தித்த வடிவேல் சுரேஷ் எம்.பி., தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.