மைத்திரி, மஹிந்தவுக்கு எதிராக நாட்டு மக்கள் களத்தில் குதிப்பு! – ஐ.தே.கவின் ஏற்பாட்டில் செவ்வாயன்று கொழும்பில் மாபெரும் போராட்டம்

ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்புக்கு முரணாக பிரதமர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னடுக்கப்படவுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

மைத்திரி, மஹிந்த ஆகியோருக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் களமிறங்கவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *