புலிகளுக்கு நட்டஈடா? – புலம்புகின்றார் விமல்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நட்டஈடு வழங்க முன்வராத அரசு சர்வதேச நிபந்தனைக்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு நட்டஈடு வழங்குகின்றது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதிச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கைகளின் மூலமாகவே இன்று நாட்டின் ரூபா வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் எமது நாட்டின் சாதாரண தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பைக் கண்டுள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *