மழை, காற்று காரணமாக பெரு விருட்சம் சாய்ந்தது!

யாழ்ப்பாணத்தில் நிலவும் மழை மற்றும் காற்று காரணமாக சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள மின்சார சபையின் வடபிராந்தியக் காரியாலயம் முன்பாக நின்ற மரம் ஒன்று வீதிக்குக் குறுக்காகச் சரிந்தது.

இதனால் பழைய பூங்கா வீதியுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியால் இணைப்பு வழங்கப்பட்ட மின்சார மற்றும் தொலைபேசி இணைப்பு வயர்களும் சேதமடைந்தன.

நேற்று சரிந்த அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை மின்சார சபையின் வடபிராந்திய அதிகாரிகள் முன்னெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *