வீரகொடியவில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!

வீரகொடிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரகெடிய, உடயாய பகுதியில் இன்று (24) குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீரகெடிய, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பழைய பிரச்சினை ஒன்றின் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுள்ளனர்.

வீரகெடிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *