வீதிக்கு வந்த யானையால் புளியங்குளத்தில் பரபரப்பு!
வவுனியா, புளியங்குளம் பகுதியில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். அத்துடன் அங்கு பரபரப்பான நிலையும் ஏற்பட்டது.
நேற்று மாலை புளியங்குளம் – நெடுங்கேணி வீதிக்கு வந்தது யானை ஒன்று. இதனால் அந்த வீதி வழியாகப் போக்குவரத்துச் செய்த பயணிகள், வாகனச் சாரதிகள், வேலை முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தர்கள எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
அவ்வப்போது மாலை வேளைகளில் இந்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிப்பதாகத் தெரிவித்தனர்.
(வவுனியா நிருபர்)