சிற்றுண்டி வாங்க வந்த மாணவியை வன்புணர்ந்த கடை முதலாளி கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயதுடைய மாணவியை 52 வயதுடைய தேநீர் கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேக நபர் நேற்றிரவு இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் மாணவி சம்பவ தினமான கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு முன்னாள் உள்ள குறித்த தேநீர் கடைக்கு சிற்றுண்டி வாங்கச் சென்றுள்ளார். கடையில் எவருமில்லாததை அடுத்து கடை முதலாளி அம்மாணவியை கடையின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட் மாணவி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கதி குறித்து தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் பாடசாலை அதிபர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து குறித்த கடை முதலாளி நேற்றிரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

(அம்பாறை நிருபர் சரவணன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *