காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விசேட கூட்டம்!
தங்கள் காணிகளை இழந்த அம்பாறை மாவட்டம், லஹுகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் நோக்கில் லஹுகல பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை விசேட கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட மக்கள் தங்களின் பிரச்சினைகளைத் தெரியப்படுத்தியதோடு கூடிய விரைவில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.