மலையக உறவுகளுக்கு ஆதரவாக யாழில் இன்று பெரும் போராட்டம்!
மலையக மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு, பஸ் நிலையம் முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ‘உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.