பூச்சாடியில் கஞ்சா வளர்த்தவர் கைது – உல்லாச விடுதி முற்றுகை

உல்லாச விடுதியில், பூச்சாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபரை அட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி சவுத் வனராஜா பகுதியிலுள்ள உள்ளாச விடுதியை இன்று சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார், ஒருதொகை கஞ்சா செடிகளையும் மீட்டுள்ளனர்.

விடுதிக்கும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருகலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மு.இராமச்சந்திரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *