மைத்திரி, கோட்டா கொலைச் சதி: நாலகவைப் பணியிலிருந்து உடன் இடைநிறுத்துமாறு பரிந்துரை

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை, பணியிலிருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு, சதித்திட்டம் தீட்டியதாக, நாலக டீ சில்வா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *