ஜனாதிபதியைக் கொல்ல ‘றோ’ சதி: நிராகரித்து விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது ஊடகப் பிரிவு

தன்னைக் கொலைசெய்வதற்கு ‘றோ’ சதித் திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி ஊடகப் பிரிவு நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் இன்று மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுவாகவே இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *