வீதியில் நடந்து சென்ற பெண் கொடூரமாக வெட்டிக்கொலை!

ஜா-எல பொலிஸ் பிரிவின் கனுவன, ராஜமவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற இந்த பெண் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலக்கம் 64 கனுவன, ரஜகஹா மாவத்தை , ஜா-எல என்ற முகவரியை சேர்ந்த 60 வயதான இந்திரா போலின் டி சில்வா விக்கிரமதிலக்க என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் குறித்து ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *