பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சொல்லுங்கள் – அமலாபால்

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது நானாக முன்வந்து வெளியில் சொன்னேன். அதைப்போல எல்லா பெண்களும் சொல்ல முன்வர வேண்டும் என அமலா பால் கேட்டுக்கொண்டார்.

அண்மைக் காலமாக நடிகை ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரனாவத் ஆகியோர் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், ராட்சசன் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகை அமலா பால் #Metoo இயக்கம் மூலம் #Metoo பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி தைரியமாக சொல்ல முடிகிறது.

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது நானாக முன்வந்து வெளியில் சொன்னேன். அதைப்போல எல்லா பெண்களும் சொல்ல முன்வர வேண்டும்” என அமலா பால் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *