திகாவும் தொண்டாவும் களத்தில்! – காணி வழங்க இ.தொ.கா. உறுதி; வீடமைத்துக்கொடுக்க திகா அணி பச்சைக்கொடி
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ{ம், தொழிலாளர் தேசிய சங்கமும் உறுதியளித்துள்ளன.
அபாயத்தை எதிர்கொண்ட பகுதிக்கு நேற்று மாலை பணயம் மேற்கண்ட தொண்டமான், நிலைமைகளை பார்வையிட்ட பின்னரே, மக்களிடம் மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதிய இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்று லையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாயஅபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரமும் உறுதியளித்துள்ளார்.
நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள நிழத்தாழிறக்க பகுதிகளை நேற்றுமாலை நேரில்சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ், அம்பகமுவ பிரதேச செயலாளர் உட்பட பலரும் திகாவுடன் சென்றிருந்தனர்.