சின்மயிக்கு வைரமுத்து ‘செக்’ – வழக்கு தொடுக்குமாறு சவால்!
சின்மயி கடந்த வாரம் ஒரு இடியை தூக்கி போட்டார். கவிஞர் வைரமுத்து தனக்கு பல வருடங்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றார்.
அதை தொடர்ந்து அனைத்து மீடியாக்களிலும் இந்த செய்தி தான் ட்ரெண்ட், இந்நிலையில் டுவிட்டரில் வைரமுத்து காலம் தான் பதில் சொல்லும் என கூறி சமாளித்தார்.
ஆனால், தற்போது வீடியோ வடிவில் ‘தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது; வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளேன்.
சின்மயி புகார் பொய்யானது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இனி சின்மயி தான் தைரியமாக வழக்கு தொடுக்க வேண்டும், பார்ப்போம் பொறுத்திருந்து