மு.காவை வளைக்கும் மஹிந்தவின் திட்டத்துக்கு வேட்டு! – இடைக்கால அரசுக்கு ஆதரவில்லை என அக்கட்சி அறிவிப்பு
இடைக்கால அரசு அமைக்கும் முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மக்கள் ஆணைக்கு புறம்பாகச் செயற்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது என அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசின் பதவிக் காலம் நிறைவடையும் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.