குப்பைத் திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் திரண்ட மக்கள்!
புத்தளத்தை நாட்டின் குப்பைத் தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக, புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியாக விஸ்வரூபமெடுத்தது.
புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக, புத்தளத்தில் 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14ஆவது நாளான நேற்று சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றது.
புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் இருந்தவாறு சர்வமதத் தலைவர்களின் உரைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து, குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்து புத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றியத் தலைவர்களால் புத்தளம் மாவட்ட செயலாளரிடம் நான்கு பக்கங்களைக் கொண்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.