மட்டக்களப்பில் புதையல் தோண்ட முற்பட்ட 12 பேர் வசமாக சிக்கினர்!
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, நீர்கொழும்பு, சிலாபம், அலாவத்தை, அக்குறனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.