உகாண்டாவில் கனமழையால் நில சரிவு- 34 பேர் பலி

உகாண்டா நாட்டின் கிழக்கே எல்கான் மலை பகுதியில் கனமழை பெய்து வந்தது.  இதனை அடுத்து ஏற்பட்ட நில சரிவால் மக்கள் மண்ணில் புதைந்து போனார்கள்.  இதில் 3 கிராமங்களில் உள்ள வீடுகள் புதைந்து போயின.
துபற்றி பேரிடர் மேலாண் கழக உயரதிகாரி ஓவர் கூறும்பொழுது, ஆறு ஒன்று கரையை உடைத்து கொண்டு பாய்ந்ததில் பாலம் ஒன்று மூழ்கி போனது.  அருகிலுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.  சிலர் காணாமல் போயுள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என தெரிவித்துள்ளார்.
இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *