மகன் திட்டியதால் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை! – தும்மலதெனியவில் சோகம்

மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் தாயொருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள துயர் சம்பவமொன்று வென்னப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு தும்மலதெனியவைச் சேர்ந்த 47 வயதான தாயொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் நெடுநாளாகவே உளரீதியான பாதிப்புக்குள்ளாகியிருந்தார் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வென்னப்புவு, தும்மலதெனிய பகுதியிலுள்ள கிங் ஓய பாலத்துக்கு மேலிருந்தே அவர் குதித்துள்ளார். மகனிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையே அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்படும் எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *