மாற்று அரசுக்கு வாய்ப்பே இல்லை – சபை முதல்வர் திட்டவட்டம்

மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் ஆட்சியமைக்க முடியாது, அத்தகையை குழுவுடன் இணைய நாம் தயாரில்லை – என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக் ஷ்மன் கிரியல்ல சபையில்  (09) தெரிவித்தார்.

ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் இல்லாத நிலையில்,  மாற்று அரசொன்றை அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுவருவதாகவும், இரண்டு அணிகள் இணையபோவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் மரிக்கால் எம்.பியால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் இவ்வாறு அறிவித்தார்.


“ நல்லாட்சி அரசுக்கே மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் அதை செய்யமுடியாது. அவ்விரு அணிகளும் இணையும் என்று நாம் நம்பவில்லை” என்றும் சபை முதல்வர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *