“எனது அப்பா எங்கே? எனது பிள்ளை எங்கே?” – ஐ.நாவைத் தலையிடுமாறு கோரி கிழக்கில் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபையை நேரடியாகத் தலையிடுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு வைத்தியசாலை முன்பாக ஆரம்பமாகி, காந்திப்பூங்காவில் நிறைவடைந்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியதுடன் சர்வதேசம் நேரடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *