விக்கிக்கு வேட்டு! – புதிய முதலமைச்சர் வேட்பாளரை களமிறக்குகின்றது கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.
வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆளுநரின் கையில் இன்னமும் நிதி உள்ளது”- என்று குறிப்பிட்டுள்ளார்.